விருது

மார்ச் 22, 2009

மாண்புமிகு செக்குலர் திலகம் மதானி

Filed under: Uncategorized — விருது @ 6:19 முப

இந்த பாரதப்பூமியை பீடித்துள்ள ஒரே வியாதியான பாஜபாவை வீழ்த்தி இந்த புண்ணிய பூமியில் அழிந்துகொண்டிருக்கும் செக்குலர் உணர்வை காத்து இங்கிருக்கும் நூத்திப்பத்து கோடி இந்தியர்களையும் (முப்பத்து முக்கோடி தேவர்களை அழித்துவிடவேண்டும்…) காப்பாத்த சீன காருண்யத்தின் வரப்பிரசாதமாய் நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் கட்சியான சிபிஎம் செக்குலர் திலகங்களை தேடித்தேடி வெளிக்கொணர்வது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது.

இந்த சிகப்புச்சிட்டை சின்ன ராசுகள் கேரளாவில் இப்போது PDF லீடர் மதானியோடு கை கோர்த்து கட்டிப்பிரண்டுகொண்டிருக்கிறார்கள்.   அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மாண்புமிகு அப்துல் நாசர் மதானி ஒரு செக்குலர் திலகமாம்.   PDF கட்சி செக்குலர் கட்சியாம்.

எந்த மதானி என்கிறீர்களா?   கிழிஞ்சது போங்க  –  நம்ப கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு புகழ் மதானி தாங்க…

மதானி செக்குலர் திலகம் என்றால் நான்தான் பராக் ஒபாமா.

இந்த தடவை சிகப்புச்சட்டைகளின் சாயம் வெளுத்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.  திடீரென்று பெய்த மழையில் எதிர்பாராமல் முளைத்த காளான்களாய் இவர்கள் 60 சீட் போனதடவை வாங்கி தேசத்தை சோனியாவின் கையில் கொடுத்து சீரழித்தது இனிமேலும் நடப்பது மிகவும் சந்தேகம்தான்.  அதனால்,  இவர்கள் இப்போது யாரைப்பார்த்தாலும் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக்கொள்ளும் கிறுக்கர்களாய் அலைகிறார்கள். 

இவர்கள் மதானிக்கு கொடுத்த இந்த சர்டிபிகேட்டை அந்த கட்சியின் அறிவிக்கப்படாத அதிகாரபூர்வ ஏடான இந்துப்பத்திரிக்கை முழுதும் கட் செய்யாமல் வெளியிட்டு சந்தோஷப்படுகிறது.

http://www.hindu.com/2009/03/22/stories/2009032250430100.htm

Mr. Vijayan said the LDF had opposed Mr. Maudany strongly in the past. However, Mr. Maudany made it clear that he was in favour of secularism following his release from jail. He came out in the open against religious extremism and communalism and rightly approached political parties that followed similar principles.

இவர்களின் செக்குலர் ஒப்பாரியை இனிமேல் எங்கள் தெரு நாய்கூட மதிக்காது.  எப்போதுதான் மதித்திருக்கிறது என்கிறீர்களா, அதுவும் சரிதான்!!!

அடுத்து சிபி எம் சொல்லப்போவது என்ன?   அப்சல் குரு ஒரு காந்தியவாதி.  அப்துல் கசாப் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்…

 இப்படியெல்லாம் ஓட்டு வாங்குவதற்கு..  இவர்களுக்கு .  தூ…

திசெம்பர் 27, 2008

அருந்ததிகளும் அந்துலேக்களும்

abdurrahman_anthule1டெல்லியில் கடந்த ஞாயிறு கடும் பனியில் ஏதோவொரு டீ.விக்கடை. பத்து பதினைந்து டிவிக்களில் பாகிஸ்தானிய அதிபர் பேசிக்கொண்டிருந்தார். “ஹம் ஜங் நஹீ சாஹ்தே!’ (நாங்கள் போரை விரும்பவில்லை!). பார்வையாளர் கூட்டம் திரும்பிக்கத்தியது “க்யுங்கி தும் கபீ நஹீ ஜீதேகா!” (ஏனென்றால், நீ எப்போதும் நாங்கள் வெற்றிபெறமாட்டாய்!). ஒரு பார்வையாளர் ஹிந்தியில் கத்தினார் “இவர்களை காலி செய்துவிட வேண்டும்!”. எல்லோர் முகத்திலும் வெறுப்பு. கடைசியில் ஒருத்தன் வெறுப்பாய்ச்சொன்னான் “பர், ஹமாரி ஹிஜ்ரா சர்கார் நாலாயக்!” (ஆனால், கையாலாகாத நம் இந்திய அரசாங்கம்!).

இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் உணர்ச்சிகள் பெருக்கெடுத்தோடும் தருணம் இது. இந்த உண்மையான இந்தியாவின் பொருமலும், விரக்தியும் தேசத்தின் ஒவ்வொரு அசாதாரண சவாலிலும் காணக்கிடைக்கிறது. கந்தகார் பணையம் முதல் கார்கில் யுத்தம் வரை இத்தேசம் தடுமாறி, தடுமாறி ஒரு நிரந்தர தீர்விற்கு ஏங்கி நிற்கிறது. ஆனால், இந்த மைய இந்தியாவிற்கு அங்கீகாரமோ, அவர்களின் கவலைகளுக்கு பதிலோ வழக்கம்போல இப்போதும் கிடைக்குமில்லை.

இன்று இந்தியாவில் பாகிஸ்தானை வெறுப்பவர்கள் அறியாதர்கள். இவர்கள் அறியாமல் இந்தியாவின் யுத்தம் எப்போதோ தொடங்கிவிட்டது. அரசு வளாகங்களிலும், பத்திரிக்கை மசிகளிலும், பக்கத்து இருப்பிடங்களிலும் இது பல காலமாய் நடக்கிறது.

இந்திய தேசியம் என்னும் பொன்முட்டை வாத்தை குறிவைத்து இந்த யுத்தம் விரோதிகளால் இந்திய மனங்களில் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் பகிரங்க தாக்குதல்கள் இந்த உள் யுத்தங்களோடு பிசிறாமல் பிணைந்திருக்கின்றன. இது காலம், தேதி வைத்து நடக்கும் மகாபாரத யுத்தமல்ல. புரட்டும், பொய்யுமே ஆதாரமாய் ராவணர்கள் நம் முதுகில் நடத்தும் யுத்தம். இவர்கள் சிருஷ்டிக்கும் மாயபிம்பங்களில் ஏமாந்துபோகும் மஹாரதிகள் உண்மை எதிரியை விட்டு தன் நாட்டையே தாக்கி அழிகிறார்கள்.

அந்துலேக்களையும், அருந்ததிகளையும் நாம் இப்படித்தான் பார்க்கிறேன்.

ஓட்டுவங்கி அரசியலில் புரையோடிப்போன மதிப்பீட்டுகளில் அடையாளம் இல்லாத அந்துலேக்கள் ஆதாயம் அடைகிறார்கள். துளித்துளியாய் விஷம் கலந்து தன் இன இஸ்லாமியர்களிடம் அந்துலேக்கள் விதைத்த பார்த்தீனிய பயிர் இந்திய பூங்காவை பாலைவனமாய் ஆக்கிக்கொண்டிருக்கிறது.

தேசத்தை அதிரவைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறுபான்மைகளின் மனக்கோவிலில் காங்கிரஸ் சர்க்கார் ஓட்டுக்காக பலியிடும் தேசீயத்தின் இன்னொரு பலியாடாய் மாறிப்போவதேன்! தியாக (!) அன்னை சோனியாவின் மகிழ்விற்காக குரைக்கும் இந்த நாய்க்குட்டிகளின் வாதங்கள் இந்தியாவை நிதானமாய் கூறுபோட நடக்கும் ஈரங்க யுத்தத்தின் முதல் பகுதி.

பாராளுமன்றத்தில் தேசீயவாதிகளின் குமுறலும், கோபமும் பெறப்பெற அந்துலேக்கள் அகமகிழ்ந்த அருவருப்பை தேசம் கண்டது. இஸ்லாமியர்களின் அறிவு கலப்பற்ற வெறும் உணர்ச்சி நாளங்களைக் குறிவைத்து அந்துலே வழங்கிய உண்மை கலப்பின்றி எழுப்பிய மாயபிம்பங்கள் இந்திய இஸ்லாமியர்களின் சுயபரிசோதனைத் தேவையை தவிர்த்த தற்காலிக நிவாரணமாய் ஆனது.

இந்த யுத்தத்தின் முக்கிய அம்சம் தெற்காசியாவின் சிறந்த நிலையில் வாழும் இந்திய இஸ்லாமியர்களை அபலைகளாகவும், மறுக்கப்பட்டவர்களாகவும் நிரந்தரமாய் சித்தரிப்பது. இதனால் இஸ்லாமியர்களிடம் விளையும் இந்திய தேசீய வெறுப்பை கொள்முதல் செய்து ஓட்டுவங்கியை நிரப்புவதே இந்த உள்நாட்டு தீவிரவாதிகளின் இலக்கு.

அந்துலேக்களின் இந்த செயல், மும்பை ரயிலடியில் கஸாப் நடத்திய படுகொலைகளை ஒத்திருக்கிறது – அடிமட்ட மக்களைக் குறிவைப்பதிலும், திடீரென நடந்து முடவதிலும். ஆனால், இரண்டிலும் உள்காயங்கள் இந்தியாவை நிரந்தரமாய் ஊனமாக்க முயல்கின்றன.

உண்மையை புறக்கணித்து இந்த அந்துலேக்கள் உள்ளிருந்து நடத்தும் உணர்ச்சியுத்தத்தை நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவர்கள் உண்மை என்னும் பந்தத்தால் பீடிக்கப்படவில்லை.

மறிக்காமல் கஸாப் கொடுத்த வாக்குமூலம், அதிருஷ்டவசமாய், பாகிஸ்தானை அடையாளம் காட்டியதால், அபாய அந்துலேக்கள் இந்த பாதகத்தை இந்துத்துவாக்களின் சதியென்று இட்டுக்கட்டாமல் காத்தது.

அந்துலேக்கள் இந்திய இஸ்லாமியர்களின் நாயகர்களாய் ஆகிவிட்டதாக பத்திரிக்கைச் செய்திகள் சொல்கின்றன. இஸ்லாமியர்களின் இந்த மந்தை மனப்பான்மை குறித்து ஷாபானாக்கள் வெட்கப்படலாம், ஆனால் புஷ்ஷைக் குறிவைத்த செருப்புக்கு அரேபிய இஸ்லாமியர்கள் கோடிகள் கொடுக்கும்போது அந்துலேக்களுக்கு நம்மூர் இஸ்லாமியர்கள் ஓரிரு ஓட்டுப்பெட்டிகள்கூட தரமாட்டார்களா என்ன! நடிகை ஜொகான்ஸன் தும்மித்துடைத்த காகித்திற்கே போனவாரம் கிடைத்த லட்சங்கள் அளவிற்காவது இந்த அறிவில்லாக் கூட்டங்கள் அந்துலேக்களை ஆராதிக்க மாட்டார்களா என்ன!

அடுத்து, அருந்ததிகள். நடக்கும் உள்யுத்தத்தின் இந்த இரண்டாவது பரிமாணம் தாஜ் ஹோட்டல் தாக்குதல் போல மேல்மட்ட பிணையாளர்களுக்கானது. அந்துலேக்கள் எழுப்பும் ஆதாரமில்லாத அபத்த சந்தேகங்கள் போலின்றி, இவர்கள் நுட்பமாய் நெய்யும் காரணிகள் தேசீய குரல்வளையை ஆழமாய் தகர்க்கின்றன.

அருந்ததி ராய் போன்றவர்களுக்கு எல்லா வியாதிகளுக்கும் ஏக காரணம் இந்துத்துவமும், இந்தியமும்தான். இந்த காரணிகளைக் காட்டாத எந்த ஒரு கணிப்பையும் இவர்கள் ஏற்பதில்லை. இவர்கள் வரையும் வினோத சித்திரங்களில், அத்வானிகள் அப்பாவி அஸ்மல் கஸாப்களை வதைப்பார்கள்.

இந்தியாவில் இன்னும் மிச்சமிருக்கும் இந்துத்துவத்தைக் களைவதே இவர்கள் கொடுக்கும் தீர்வு. இதில் இவர்கள் லஷ்கரின் லட்சியத்தை வழிமொழிகிறார்கள்.

அருந்ததி ராய் தன் கட்டுரையில் இன்னொரு பிரிவினையை இந்தியா தாங்காது என்று மகிழ்ச்சியடைகிறார். இந்திய முஸ்லிம்கள் வெகுண்டால் இந்தியாவால் சமாளிக்கமுடியாது என்று பயமுறுத்துகிறார். இரண்டாவது பிரிவினை என்ற விபத்து நடந்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு அதுவே இறுதி தருணமாய் இருக்கும் என்பது என் கணிப்பு. பெரும்பான்மை சமுதாயம் தன் மறுக்கப்பட்ட நீதிக்கு ஏங்குவதை நான் இந்தியாவின் பாமர மக்களிடம் காண்கிறேன்.

இன்னொரு பிரிவினையில் உணர்ச்சிகள் திறக்கும் ரத்த ஆறுக்கு தடை போட இங்கே காந்திகளையும், காஃபர் கான்களையும் நான் தற்போது காணவில்லை. இது நல்லதல்ல. ஆகவே, இஸ்லாமியர்களை இந்துக்களுடன் தலாக்கிற்கு முனையச்செய்யும் இந்த அருந்ததிகள் இந்தியாவை அழிக்கும் இரண்டாவது விரோதிகள்.

அருந்ததி ராயின் பசப்பு வார்த்தைகளில் டொகாடியாவை மும்பை பயங்கரத்துடன் இணைக்க முடிகிறது. எப்படியாவது இந்துத்துவத்தை இழிவுபடுத்த இவர்கள் கோர்க்கும் ஒவ்வாத சங்கிலிகள் அஜ்மல் கஸாப்பை சாத்வியின் ஏஜண்டாக்கிவிடுகின்றன. காண்பதெல்லாம் காவிதான் இவர்கள் கண்களில் படுகிறது.

எல்லா தீவிரவாதங்களுக்கும் சூழலே காரணம் என்று அங்கலாய்க்கிறார் அருந்ததி ராய். உண்மைதான். ஆனால், அந்த சூழலுக்கு கர்த்தாவாய் அத்வானியை நிறுவியது சரியில்லை. உலகெங்கும் பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாதச் சூழல் அருந்ததி ராய்க்கோ உண்மை காரணியாய் புலப்படுவதேயில்லை.

இந்து தீவிரவாதம் என்பது இல்லாத ஒன்று. ஓரேயொரு விபத்தில் இன்னும் முடிவாகாமல் இருக்கும் ஒரு புது பிராணி அது. ஆனால், இஸ்லாமிய தீவிரவாதம் (இஸ்லாமிய அரசுகளை நிலைநாட்ட நடத்தப்படும் ஜிகாத்) நூற்றாண்டுகளாய் உலகெங்கும் பல வெற்றிகள் கண்ட ஒரு அடாத முயற்சி. இந்தியா என்னும் சிந்தனையின் தொடர் வாழ்வு அந்த வெற்றிக்கு விளைந்த பங்கமாய் இருப்பதால் ஜிகாதிகளின் முதல் குறியாய் இந்தியா இருக்கிறது.

வரலாற்றில் விசித்திரமாய் இங்கே இஸ்லாமிய ஆளுமை தோற்றது. அந்த வரலாற்றுப்பிழையைத் திருத்த பெட்ரோல் டாலர்களுடன் அல்லாஹூவின் ஏராள அடிமைகள் இரண்டாவது சுற்று இறங்கியிருக்கிறார்கள்.

பெரும்பான்மை எண்ணத்திற்கு மாறாக, தெற்காசியாவில் இஸ்லாமிய ஜிகாதின் இறுதி வெற்றி இந்திய இஸ்லாமியர்களுக்கு அனுகூலமாகவே இருக்கும். இந்திய இஸ்லாமியர்கள் பயப்படவேண்டியது ஜிகாதிகளின் இறுதித் தோல்வியும், இடையில் விளையும் இந்துக்களின் எதிர்நீச்சலும்தான்.

அருந்ததிகளின் பங்கு இங்குதான் ஜிகாதிகளுக்கு இன்றிமையாததாகிறது.

இந்தியா என்னும் தேசம் பாகிஸ்தானை படையால் வெல்வது சுலபம். ஏற்கனவே உள்ளுக்குள் சிதறிவரும் பாகிஸ்தானுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணலாம். ஆனால், உள்ளிருந்தே விஷம் விதைக்கும் இந்த அருந்ததிகள் அழகான வார்த்தைகளால் ஆபத்தை மறைக்கிறார்கள். இந்தியாவின் ஓர் அங்கமான இவர்களை கருத்துக்களால் தோற்கடிக்க வேண்டியிருப்பதே நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்.

தகுதியான எதிரிகளைத் தயார்செய்துகொள்வது எந்த வெற்றிக்கும் முக்கியமான அடிப்படை. இந்தியாவை உள்ளிருந்து தாக்கும் புற்றுநோய்கள் அந்துலேக்களும், அருந்ததிகளும். இந்தியத்தின் அங்கமான இஸ்லாமியர்களை தேசீயத்துக்கு எதிராக செயல்படுத்தும் இந்த எதிரிகளை இனம் கண்டுகொள்வோம். இவர்கள் குணப்படுத்தவேண்டியவர்கள், தீர்க்கப்படவேண்டியவர்கள் அல்லர். இவர்களை ஒப்பிட்டால் பாகிஸ்தான் நம் பிரச்சனை அல்ல. பாவம் அந்த பாழாய்ப்போன நாடு.

திசெம்பர் 18, 2008

கருணாநிதியின் புதிய மனுநீதி

திணமனியின் இந்த கட்டுரை இங்கே மீள்பதிப்பு

 
கருணாநிதியின் புதிய மனுநீதி!

பழ. கருப்பையா
அண்மையில் முன்அனுபவமே இல்லாத தகுதியற்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பினை மத்திய அமைச்சர் ஆ. ராசா ஒதுக்கீடு செய்ததில் ஏறத்தாழ ரூ. 60,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ அரசு இலவச மருத்துவமனைகளைத் தோற்றுவித்திருக்கலாம்.

பேறுகாலப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல், தரையில் கோரைப் பாயில் ஈனுவதும், வரிசையில் நிற்கும் மற்ற பெண்களுக்கு அந்தக் கோரைப் பாயை வழங்குவதற்காக, மறுநாளே அந்தப் பச்சை மண்ணை துணியில் சுற்றிக்கொண்டு வெளியேறுமாறு அரசு மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்தப்படுவதும், இத்தகைய பெண்களில் குறிப்பிட்ட அளவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே என்பதும், ஓய்வெடுப்பதற்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசுச் செலவில் செல்லும் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது!

இந்த அறுபதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஓர் “அரசு அப்பல்லோவையே’ தோற்றுவிக்கலாம்!

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி என்பதையே மாற்றி ஒவ்வொரு கிலோ அரிசியும் இலவசம் என்று அறிவிக்கலாம்! ரூ. 58 விலையுள்ள நான்கு நாள்களுக்கும் கூடப் போகாத மளிகைச் சாமான் பொட்டலத்தை எட்டு ரூபாய் சலுகையில் ரூ. 50-க்கு விற்பதற்குப் பதிலாக, ரூ. 1,000 மதிப்புள்ள மளிகைச் சாமான் பொட்டலத்தை, நாற்பது விழுக்காடு ஏழைகளுக்கு, அவர்களின் தேவையை ஓரளவு நிறைவு செய்யும் வண்ணம், முற்றிலும் இலவசமாகவே வழங்கலாம் அல்லது அமைச்சர் ஆ. ராசா “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முற்பட்டதன்’ பயன் எந்த அளவினதாயினும், அதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினனுக்கும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் பங்கிட்டுக் கொடுத்திருந்தால், அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு இரண்டு மாதத்திற்காவது வழி பிறந்திருக்கும்!

அலைவரிசைக் கற்றையினை “முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவதற்கு’

இதென்ன கோயில் பிரசாதமா?

அதை வாங்கிய இருவரும் மறுநாளே பல்லாயிரம் கோடி பார்த்து விட்டார்கள் என்றால், அதற்கு பின்னணியில் ஒரு மாபெரும் ஊழல் நடந்திருக்க வேண்டும் என்று மக்களால் உய்த்துணர முடியாதா?

கற்பழிப்பவன் சாட்சி வைத்துக் கொண்டா கற்பழிக்கிறான்? ஆனால் கற்பழிப்புகள் கண்டுபிடிக்கப்படாமலா போய்விடுகின்றன? லஞ்ச ஊழலும் அத்தகையதுதான்!

“முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவது’ முறையற்றது. ஆகவே போட்டிகள் மூலம் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று தெளிவாக உயர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகும், பழைய முறையே பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி தாங்கிச் சொல்வதில் என்ன பொருளிருக்க முடியும்?

ஆ. ராசாவுக்கு முன்பிருந்த தயாநிதிமாறன் பின்பற்றிய முறையைத்தான் இவரும் பின்பற்றினார் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார். தயாநிதிமாறன் கருணாநிதியின் பேரன்தானே? அவரென்ன கரம்சந்த் மோகன்தாஸ் காந்தியா?

அவருக்கு முன்பும் இதே முறைதான் பின்பற்றப்பட்டதாம்? ஒரேயடியாக வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோதே இந்தமுறைதான் பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி சொல்லியிருந்தால், சிரிப்பவர்கள் வாய்விட்டுச் சிரிக்க வசதியாக இருந்திருக்குமே!

பாரதீய ஜனதா அருண்சௌரியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கருணாநிதி. அப்படி ஒருவேளை அருண்சௌரி பிழை செய்திருந்தால் அதை ஏதுக்களோடு எடுத்துக்காட்டி, அதே பிழையை நாங்கள் செய்யாததால், பல்லாயிரம் கோடி அரசுக்கு வருவாய் என்று மார்தட்டி இருந்தால் அது பெருமை!

அருண்சௌரி காலத்தில் இந்த அலைவரிசைத் தொகுப்பின் பயனாளிகள் வெறும் முப்பத்தைந்து லட்சம் பேர்; இன்று அந்தப் பயனாளிகள் முப்பந்தைந்து கோடிப் பேர்; ஆண்டுக்கு ஒரு கோடிப் பேர் வேறு பெருகுகின்றனர். இதிலென்ன முன்னோர் முறை?

பயனாளிகளின் எண்ணிக்கை நூறு மடங்கு கூடியிருக்கும்போது, அரசின் வருவாயும் அதற்குத் தகக் கூட வேண்டும் என்பது எந்தக் குறைந்த அறிவுள்ளவனுக்கும் புலப்படுமே! பகுத்தறிவு பேசும் முதலமைச்சருக்குப் புலப்படாதா?

இரண்டு நாள்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுஞ்சாலையில், தொடர்வண்டி கடந்து செல்வதற்காக, ரயில்வே கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் நான் அங்கு சற்று நேரம் நிற்க வேண்டியதாயிருந்தது.

இரண்டு பெண்கள் பனங்கிழங்குக் கட்டுகளோடு ஓடிவந்தார்கள். ஒருத்தி சிறுபெண், வெளிறிய பாவாடை, சட்டை. எண்ணெய் அறியாத சிக்குப் பிடித்த தலைமுடி. அவன் பின்னால் இன்னொருத்தி ஓடி வந்தாள். அவள் சற்றே பெரிய பெண். ஆனால் அதே ஏழ்மைக் கோலம்!

வேகமாக முந்தி வந்த சிறியவள் பனங்கிழங்குக் கட்டை முதலில் வண்டியில் நீட்டினாள். ” என்ன விலை? என்று கேட்டேன். “கட்டு அஞ்சு ரூபாய்’ என்றாள். அதற்குள் இன்னொரு பெண்ணும் மூச்சிறைக்க ஓடி வந்து. “ஐயா அதைவிடப் பெரிய கிழங்கு இதை வாங்கிக்கங்க’ என்றாள்.

“முதலில் வந்தவளுக்கே முதல் உரிமை’ என்னும் ஆ. ராசாவின் கொள்கைப்படி’ “முதலில் அவள்தானே வந்தாள், அவளிடமே வாங்கிக் கொள்கிறேன்’ என்றேன்.

“அவ வச்சிருக்குற கிழங்கு சூம்பிப் போனது; என் கிழங்கு நல்லா விளைந்த கிழங்கு; கிழங்கைப் பார்த்து வாங்க மாட்டீங்களா?

பிறகுதான் கிழங்குகளின் தரவேறுபாடு தெரிந்தது. “இரண்டு பேரும் ஒரே கிராமமா? என்று கேட்டேன்.” அவ எனக்குச் சின்னம்மா மகள்தான்’ என்று சொன்னாள். இரண்டு பேருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்றும், இரண்டு பேரும் ஐந்து வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

“அவ உனக்குச் சொந்தந்தானே! அவளோட ஏன் போட்டி போடுறாய்?

“வியாபாரமின்னு வந்திட்டா, சொந்தமெல்லாம் பார்க்க முடியுமா? அவ வீட்டு உலை வேற; என் வீட்டு உலை வேற;

“முதலில் வந்தவளுக்கு முதல் உரிமை’ என்ற ஆ. ராசாவின் கொள்கையைப் பின்பற்றப்போய், வாங்கிய சவுக்கடி போதும் என்று முடிவுக்கு வந்த நான், “உன்னுடைய கிழங்கு கட்டு என்ன விலை?’ என்று கேட்டேன்.

“இருபத்தைஞ்சு ரூபாய்’ என்றாள்.

“அவள் ஐந்து ரூபாய்’ என்கிறாள். நீ “இருபத்தைந்து ரூபாய்’ என்கிறாயே என்றேன்.

“”அவ அஞ்சு கிழங்கைக் கட்டி வச்சுக்கினு, அஞ்சு ரூபாய்ங்கறா; எங் கட்டிலே இருபத்தைந்து கிழங்கு இருக்கு; கிழங்கு கூடுதலா இருந்தா, ரூபாயும் கூடுதலா இருக்குமிங்கிறதுகூட உங்களுக்குத் தெரியாதா ஐயா? என்று பெரிய பெண் கேட்டாள்.

இரண்டாவது சவுக்கடி இன்னும் பலமாக விழுந்ததை உணர்ந்தேன்; மிரண்டு போனேன்!

இருபத்தைந்து ரூபாயைக் கொடுத்து அந்தப் பெரிய கட்டை வாங்கிக் கொண்டு, “பேசாமல் ஆ. ராசாவுக்குப் பதிலாக அதே சமூகத்தைச் சேர்ந்த உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்’ என்று நான் சொல்ல, என்ன சொல்கிறேன் என்று புரியாவிட்டாலும் “உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்’ என்று நான் சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் வெட்கப்பட, ரயில்வே கதவுகள் திறந்து விட்டபடியால் நான் புறப்பட்டு விட்டேன்.

சிறிய கட்டுக்கும், பெரிய கட்டுக்கும் ஒரே விலை இருக்க முடியாது என்று பனங்கிழங்கு விற்கும் எளிய பெண்ணுக்குத் தெரிந்த உண்மை, மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்குத் தெரியா விட்டால் குற்றமில்லை. தமிழர்களின் தலைவர் என்று இடையிடையே அறிவிப்பு வெளியிட்டுக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாவிட்டால், ஹரியானாவில் உள்ளவன் தமிழர்களின் அறிவு குறித்து ஐயப்பட மாட்டானா?

இந்த அலைக்கற்றைத் தொகுப்பு உரிமம் வழங்கியது குறித்து, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை தன்னுடைய அதிருப்தியைக் கடுமையான முறையில் வெளியிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங்கிற்கு அடுத்ததாக உள்ள அந்தக் கட்சியின் தலைவர் அமர்சிங், “இந்த அலைக்கற்றைத் தொகுப்பு ஒதுக்கீடு குறிந்த உண்மைகளையோ, ஊழல்களையோ வெளிக் கொணராமல் இருப்பதற்காக, அதற்குத் தொடர்புடைய நிறுவனங்கள் பெருந்தொகை ஒன்றை அவருக்கு இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், அதை வாங்க மறுத்து, எல்லா உண்மைகளையும் தலைமை அமைச்சரிடம் சொல்லிவிட்டதாகவும், அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லையே, என்று கண்டித்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் பூசாரிகளின் நிலை வேறு; தொடைக்கறி பெரிய பூசாரிக்கு என்றால், ஆட்டை வெட்டிய சின்னப் பூசாரிக்கு சந்துக்கறி, தலை, குடல், எலும்பு போன்ற எல்லாம் கிடைக்கும்!

தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலம்தான் நன்மை பெற முடியும் என்னும் அடிப்படையிலேயே தொகுதிகள் தனித்து ஒதுக்கப்பட்டன. அந்த வகையில்தான் ஆ. ராசா அமைச்சரானார். ஆனால் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது கொஞ்சமா நஞ்சமா?

தாழ்த்தப்பட்ட மக்களில் தூய்மையே வடிவான கக்கன் போன்ற பெருமக்கள் இன்னும் இருக்கிறார்கள்; என்றும் இருப்பார்கள்! ஆனால் இன்னொரு கக்கனைத் தேர்வு செய்யக் கருணாநிதி ஒன்றும் காமராஜ் இல்லையே!

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்யப் பதவியும் ஒரு தடை என்றவுடன், அதையும் கூடத் தூக்கி எறிந்து விட்டார் அம்பேத்கர்.

இவற்றையெல்லாம் விட மிகப் பெரிய கொடுமை, ஆ. ராசாவுக்குத் திரண்டு வந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, தாங்கிப் பிடிக்க முடியாத கருணாநிதி, சாதி இசைத் தட்டைப் புரட்டிப் போட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான ஆ. ராசா, அவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்மீது பாய்கிறார்கள் என்றார். எதுவும் நடக்காதென்றால், கடைசியாகச் சாதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதுதான் கருணாநிதியிடம் தொட்டில் தொட்டு இருந்து வரும் பழக்கம்!

ஏதோ தாழ்த்தப்பட்டவர்களிலேயே ஆ. ராசாதான் முதன்முதலாக மந்திரி ஆனவரா? இதற்கு முன்னே இந்த வகுப்பு மந்திரிகளை பாராட்டியவர்களெல்லாம், இப்போது ஏன் பொறுக்க முடியாதவர்களாகி விட்டனர் என்று மாற்றிச் சிந்தித்துப் பார்த்தால் உண்மையும் விளங்கும், தன்னுடைய சாதிச் சிந்தனையில் உள்ள கேடுபாடுகளும் தெரிய வரும் ஆ. ராசா எந்த வகுப்பினாரால் என்ன? குற்றம் செய்தவர்கள் குற்ற வகுப்பினர்; அவ்வளவுதானே!

பார்ப்பனர்கள் குற்ற நடத்தையில் ஈடுபட்டால், குறைவான தண்டனைதான் கொடுக்க வேண்டும் என்று மனுநீதி சொன்னது!

கடந்த காலங்களில் அதற்கெதிராக ஒரு கொதிப்பு ஏற்பட்டது. ” ஒரு குலத்திற்கு ஒரு நீதியா?’ என்ற கேள்வி எழுந்தது!

தவறு செய்கின்றவன் தன் கட்சியினனால், அவனைக் காப்பாற்ற அவனுடைய முழுச் சாதியையும் இழுத்துக் கொள்வார் கருணாநிதி.

தமிழ்நாட்டில் பதவியில் இருப்பவனுக்கு எவனுக்குச் சாதியில்லை? எந்தச் சாதிக்குச் சங்கமில்லை?

எவன் தப்புச் செய்தாலும், அவனைத் தண்டிப்பது ஒட்டு மொத்த சாதியைத் தண்டிப்பதாகும் என்பது போல் கருணாநிதி பம்மாத்துச் செய்வது அவருடைய அழுகிய சிந்தனையின் விளைவே!

பழைய மனுநீதியை மனு எழுதினார்; புதிய மனுநீதியைக் கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கிறார்!

செப்ரெம்பர் 22, 2008

தமிழ் படும் பாடு!

Filed under: அரசியல்,தமிழ்,தமிழ்நாடு,Tamil,Tamilnadu — விருது @ 5:39 முப

சென்னை ஏர்போர்ட்டில் ஒருவர் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார். அவர் லக்கேஜ் வந்து சேரவில்லையாம். அருகிலிருந்த ஒரு அறைக்கதவில் பெரிதாய் “மெய்புலன் ஆர்வலர்” என்று எழுதியிருந்தது. சரி, யாரோ ஒரு ஆபீசர் என்று நினைத்து உள்ளே வேகமாக நுழைந்து பார்த்தார். அது ஒரு கக்கூஸ். ‘சே’ என்று திரும்பினார்!
அவர் அந்த அறையில் சேவித்தது நவீனயுகத்தின் நாகரீகத்தமிழ். தமிழுக்கு இருக்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள் போதாதென்று இது இன்னொன்று புதிதாய் முளைத்திருக்கிறது. ‘Political correctness’ – (இதற்கு எனக்குத் தமிழ் தெரியவில்லை. ‘அரசியல்

………

……

இப்படித் தொடங்குகிறது நான் “தமிழ்இந்து” தளத்திற்காக சமரப்பித்த கட்டுரை.

அந்த கட்டுரையை உடனே இங்கும் பதிப்பிப்பது சரியல்ல என்பதால் நீங்கள் இங்குள்ள சுட்டியில் அந்த கட்டுரையை படித்து உங்கள் மேலான கருத்துக்களை வழங்குங்கள்.

http://www.tamilhindu.com/2008/09/the-state-of-tamil-language/

ஜூன் 23, 2008

சன் டிவியின் உள்குத்து

Filed under: Uncategorized — விருது @ 10:39 முப

“ஏண்யா அந்த புள்ளய போட்டு இந்த அடி அடிக்கிற?”

“அவன் என்னய தேவாங்கு ன்னு சொல்லிபுட்டான் ஐயா”

“எப்பய்யா உன்னய அப்படி திட்டினான்?”

“அது இருக்கும் ஒரு ஆறு மாசம் முன்னாடி!”

“அடேலே!  ஆறு மாசம் முன்னாடி திட்டினதுக்கு இப்ப ஏன்யா அவன இந்த மொத்து மொத்தற?”

“நான் நேத்துதானே தேவாங்க நேர்ல பாத்தேன்!”

———–

நேற்று 22 ஜூன் சன் டிவி அசத்தப்போவது யாரு வில் சொன்ன ஜோக்

ஜூன் 4, 2008

கருநாநிதி விழாவில்

முன்பெல்லாம் திராவிட கழகங்களின் பொதுக் கூட்டத்தில் வேட்டி கிழியும்.   இல்லை,  சட்டமன்றத்திலும்,  கவுன்சில் குழுக்களிலும் வேட்டி கிழியும்.   பின்னர்,  (ப) குத்தறவின் வளர்ச்சியால் தமிழ்நாட்டு எலெக்ஷனில் கழக கண்மனிகளின் வேட்டி கிழியும்.
 
ஆனால்,  நேற்று கருநாநிதியின் 85 வயசு பிறந்தநாளில் திறண்ட கழகத்தொண்டர்களின் வேட்டி கிழிந்தது.   கோபாலபுரம் வீட்டில் வரிசையில் நின்ற தொண்டர்களின் அடிதடியில் பலருக்கு வேட்டி கிழிந்தது.
 
இப்படி வேட்டி கிழிந்தவர்களில் பரிதாபமானவர் பரமசிவம்.   இவருக்கு கரைவேட்டியுடன் கையில் வைத்திருந்த 20000 ரூபாய் ரொக்கமும் அபேஸ்.  
 
கலைஞரின் கண்மணிகள் நன்றாகவே தேறிவிட்டார்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது.
 
கோபாலபுரத்தின் தலைவரின் முன்னாலேயே இதை நடத்திக்காட்டி கலைஞரை மகிழ்ச்சியில் மூழ்கடிக்க திட்டமோ என்னவோ!
 
கிழிந்த வேட்டியுடன் பரமசிவம் போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.   இது டைம்ஸ் செய்தி.
 
பரமசிவம் ஒருவிதத்தில் அதிர்ஷ்டக்காரர்.    ஏனென்றால் மற்றவர்கள் கோபாலபுரத்தில் செல்போனை பறிகொடுத்திருக்கிறார்கள்..     குறைந்தது நாலு பேரின் செல் போன் கோபாலபுரத்தில் திருடப்பட்டதாக டைம்ஸ் செய்தி வந்திருக்கிறது.     ஆனாலும்,  அவர்களை போலிஸில் புகார் கொடுக்க கூடாது என்று அங்கிருந்த மற்ற கண்மணிகள் அன்போடு மிரட்டி அனுப்பி விட்டார்கள்.
 
அவர்கள் சொல்வதும் நியாயம்தான்.  ஏகப்பட்ட புகார் என்றால் போலிஸூக்கும் சிரமம்!    அப்பறம் போலிஸ் ஏதாவது ஏடாகூடமாக கண்டுபிடிக்க அதை யாராவது ஒட்டுகேட்டு சிடி போட்டு வெளியிட பெரிய்ய விவகாரமாய் போய்விடும் என்று பயந்திருப்பார்களோ என்னவோ!
 
இப்படி செல்போனை கலைஞரின் பிறந்தநாளுக்காக அர்ப்பணித்தவர்களில் நம் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் திரு. ரமேஷ் லக்கானியும் ஒருவர்.      காலை 9.30 மணிக்கு க்யூவில் காத்திருந்தார் இவர்.  கலைஞரை “தரிசித்து விட்டு” வந்தபோது போன் காணவில்லை.   இவர் விலைமதிப்பான 16000 மொபைல் போனை யாரோ சுட்டுவிட்டார்கள்.
 
“வீட்டுக்குள் நுழையும் போது இருந்தது.   வெளியே வந்தேன் காணவில்லை” என்று அவர் சொன்னதாக டைம்ஸ் செய்தி.
 
கோபாலபுரத்துக்கு போகிறோம் என்றால் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க கூடாதா!   இவர் என்ன சாயிபாபாவா –  பயமில்லாமல் அங்கே போவதற்கு!
 
ஊருக்கெல்லாம் ஒளி கொடுத்தாலும் விளக்கின் மூலம் இருட்டாய் இருக்கும் என்பார்கள்.   ஆனால்,  நம் கலைஞரின் ஆட்சியில் அந்த குறை கிடையாது.   எல்லா இடத்திலும் நடப்பது அவர் வாசலிலும் நடக்கிறது.  
 
தமிழன் துப்பு கெட்டவன் என்றும் இவனை இப்படியே விட்டுவிட்டுப்போய் விடுவேனோ என்றும் இனிமேல் அவர் கவலைப்பட வேண்டாம்.  கண்மணிகள் நன்றாக தேறிவிட்டார்கள்.
 
இனிமேல் கழகத்தோடு நடக்கும் தேசிய பொதுக்கூட்டங்களில் மன்மோகன் சிங்கின் தலைப்பாகையை யாராவது கிழிக்காமல் இருக்க வேண்டும். 

வாழ்க தமிழன்!

ஜூன் 3, 2008

நூல் தேர்வு 1 – “சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லுகிறேன்”

Filed under: Uncategorized — விருது @ 7:58 முப

நான் படிக்க வேண்டும் என்று தெரிந்தெடுக்கும் புத்தகங்களை இந்த தொடரில் குறிப்பிடலாம் என்று நினைத்து இதை ஆரம்பிக்கிறேன்.

“சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லுகிறேன்” என்ற புத்தகத்தின் மதிப்புரை தினமலர் 1-6-2008 இதழில் வெளியாகியுள்ளது.

அந்த மதிப்புரையில் என்னை ஈர்த்த பொருள்களை இங்கே எழுதுகிறேன்.

இந்த புத்தகத்தை எழுதியவர் சாமி.தியாகராசன்.  இவர் குன்றக்குடி அடிகளாரின் மாணவராம்.  இந்த நூலுக்கான அறிமுகம் இதோ.

சைவ சமய உலகில் காலங்காலமாகக் காப்பாற்றப்பட்டு வந்த நம்பிக்கை மரபுகளை சில போலிப் புரட்சியாளர்கள் உடைத்தெறிந்து, ஊர் முழுவதும் வெற்றி ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.  இவர்களைத்தடுத்து நிறுத்தி அவர்கள் போலியானவர்கள், ஆழ்ந்த அறிவோ, பரந்த குணமோ இல்லாத விளம்பர வீரர்கள் என்பதைத் தக்க சான்றுகளுடன் தோலுரித்துக் காட்டும் சமயக் காவல் நூல் இது.

(தினமலர் நூல் மதிப்புரையில் மா.கி. இரமணன்)

இந் நூலில் இடம் பெற்றுள்ள பல கேள்விகளும் அதற்கான விடைகளும்.   ஒரு கேள்வி பதில் இதோ.

கேள்வி:  தமிழில் திருமணத்தை நடத்தி வைக்கும் இன்றைய “தமிழ் புரோகிதரர்கள்” திருஞானசம்பந்தரின் “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்ற தேவாரத்தையே பாடி நடத்துகின்றனரே இது சரியா?

பதில் :  மரணமுற்ற பின் மறுஉலகில் நல்ல கதியுடம் வாழ்க என்னும் கருத்தமைந்த “மண்ணில் நல்ல வண்ணம்” என்ற சம்பந்தர் தேவாரம் பாடி, இன்று தாலி கட்டச் செய்வது எந்த அளவு தமிழ் புரோகிதர்களின் அவல நிலை என்பதை ஆதாரத்துடன் இந்த நூல் விளக்கும்.

காசியில் சிவலிங்கத்தை நாமே தொட்டு மலரிட்டு மஞ்சனம் ஆட்டுவதை யாவரும் போற்றும் வகையில் இங்கு திருப்பனந்தாள் ஆதீன கர்த்தர் தற்போது மதுரையில் செய்துள்ளார் என்பதை இந்த மதிப்புரையில் தெரிந்துகொண்டேன்.  இது வரவேற்கதக்க முயற்சி.

இந்த நூலில் நமக்கு கிடைக்கும் விளக்கங்கள் கீழ்க்கண்ட மாதிரியானவை:

– வடமொழியா,  தமிழ் மொழியா – சிவபெருமான் பேசிய மொழி என்ன?

– இறைவனுக்கு மிகவும் பிடித்தது வடமொழி அர்ச்சனையா தமிழ்மொழி பூசனையா?

– கண்ணப்பரின் அன்புக்கு காளத்திநாதர் அருள் கொடுத்தார்.   ஆனால், சிவகோசரியாரின் ஆகம பூசையை கண்டுகொள்ளாமல் ஏன் வெறுத்தார்?

–  ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற வடமொழி நான்கு வேதங்கள் போல, தமிழிலும் நான்மறை இருந்ததா?  அது கடல்கோளால் அழிந்ததா?

மேற்சொன்ன கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது.    ஆனால், இந்த புத்தகத்தில் பதில் இருப்பதாக அறிகிறேன்.  படித்துவிட்டு வந்து அது பற்றி விமர்சனமோ இல்லை விளக்கமோ தருகிறேன்.

இந்த புத்தகத்தை வெளியிட்டவர்கள் :  தெய்வச் சேக்கிழார் மன்றம், கும்பகோணம் –  612001.  புத்தகத்தின் விலை ரூ.50  பக்கம்-217.

இந்த புத்தகம் சென்னையில் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை.   எல்லா புது புத்தகங்களுக்கும் நான் உடனே நாடுவது எனிஇந்தியன் கடையைத்தான்.   அவர்கள் இந்த புத்தகத்தை வரவழைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார்கள்.

 சொன்னால் விரோதம்....  மதிப்புரை

நீங்கள் இந்த மதிப்புரையை முழுதுமாக படிக்க இங்கே இணைத்துள்ள படத்தை பார்க்கவும்

 

 

 

ஜூன் 2, 2008

தியோபந்திகளின் இஸ்லாமிய ஃபட்வா

Filed under: அரசியல்,இஸ்லாம்,முஸ்லிம்,Islam,muslim — விருது @ 5:13 முப
Tags: ,

இஸ்லாமியர்கள் உண்மையிலேயே மனம் திருந்தி தீவிரவாதத்தை வெளிப்படையாக எதிர்க்கும் சமுதாயத்தை உருவாக்க ஒரு நல்ல முயற்சி என்ற முறையில் இந்த ஃபட்வா வரவேற்கப் பட வேண்டியது.

ஆனால்,  இந்த ஃபட்வாவின் அடக்க விவரங்களை படிக்கும்போது, (ஆதாரம் எகனாமிக் டைம்ஸ் செய்தி)   இந்த ஃபட்வா ஒரு திறமையான ஏமாற்று வேலையாக இருக்குமோ என்று சந்தேகத்தை எழுப்புகிறது.

1.   “He said that while terrorism is destructive, jehad is constructive.”

தீவிரவாதம் வேறு ஜிகாத் வேறு  என்று இந்த அமைப்பு அறிவிக்கிறது.   ஜிகாத் என்றால் என்ன என்று விளக்கம் அளிக்கப்படவில்லை.  (ஜிகாத் ஆன்மீகமானது என்று இன்னமும் நம்பச்சொல்கிறார்களோ!).   இது ஜிகாத் என்ற பெயரில் வழங்கும் தீவிரவாதத்தை எந்த விதத்தில் தடுக்கும் என்று புரியவில்லை.

2.   இந்த அமைப்பின் பிரகடனம் இதோ.   “Islam rejects all kinds of unjust violence, breach of peace, bloodshed, murder and plunder and does not allow it in any form”. அதாவது,  நியாயமில்லாத வன்முறையை இந்த அமைப்பு கண்டிக்கிறதாம்.    நியாயமில்லாத வன்முறை என்றால் என்ன? நியாயமான வன்முறை என்று ஒன்று இருக்கிறதா?   பாபரி மசூதி இடித்ததால் மும்பையில் குண்டு வெடித்தால் அது நியாயமானதா?   குஜராத் கலவரத்தால் டெல்லியில் குண்டுவெடித்தால் அது நியாயமானதா?   இம்மாதிரி அடைமொழிகளை கொடுத்து தீவிரவாதத்தை – வன்முறையை –  நியாயப்படுத்தும் இந்த தீர்மானம் பொதுமக்களை ஏமாற்ற உதவுமே அல்லாது வேறு எப்படி உபயோகமாகும்?

3.    Citing the “sinister campaign” to malign “Islamic faith…by linking terrorism with Islam and distorting the meanings of Quranic Verses and Prophet traditions”, Mahmood Asad Madani, leader of Jamiat Ulema-e-Hind, had wanted Deoband to spell out the stand of Islam on world peace.

இந்த பிரகடனத்தில் இஸ்லாத்தின் பெயரால் வன்முறை செய்யும் ஜிகாதிய அமைப்புகளை ஒரு கண்டனமும் செய்யவில்லை.   மாறாக,   வழக்கம்போல,  இந்த வன்முறையை பொதுவில் விமர்சிக்கும் ஊடகங்கள் மற்றும் அமைப்புகளின் மேல் (இவர்கள் பார்வையில் இவை “sinister campaign”  அதாவது சதிப்பிரசாரங்கள்)  இவர்களுக்கு கோபம் வருகிறது.

ஜெய்ப்பூரில் குண்டு வெடித்ததும் அந்த வன்முறைக்கு பொறுப்பேற்றுக்கொண்ட “இந்திய முஜாகிதீன்” அமைப்பு இந்த தியோபந்திகளின் முந்தைய பிரகடனத்தை கேலி செய்திருக்கிறது.   வன்முறைதான் இஸ்லாமிய வழி என்று குர்ஆனை ஆதாரமாக சொல்லியிருக்கிறது.    இந்த தியோபந்தி அமைப்பினரை “நாய்கள்” என்று கேலி செய்திருக்கிறது.

இப்படி இஸ்லாத்தை அவமானப்படுத்தி இஸ்லாத்துக்கு இழுக்கு சேர்க்கும் உண்மையான காரணிகளை இவர்கள் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?   மாறாக,  தேவையில்லாமல் பொது ஊடகங்கள் மீதும்,  பிற மதத்தினர் மீதும், கிருத்துவ அமெரிக்க அமைப்புகள் மீதும் காழ்ப்புடன் இவர்கள் வெறுப்பை உமிழ்வது ஏன்?

இந்த எகனாமிக் டைம்ஸ் செய்தியில் இந்த அமைப்பினர் அமெரிக்க அரசைக் கண்டிக்கும்போது பெருத்த ஆரவாரம் எழுந்ததாக சொல்கிறார்கள்.

“it was when the deputy rector of Deoband, Usman, came down heavily on “the dual policy of America” that the massive crowds cheered the most”

மொத்தத்தில்,  இந்த பிரகடனம் மிதவாத பெரும்பான்மை இஸ்லாமிய சகோதரர்களை உண்மையாகவே உள்ளன்போடு வன்முறையை வெறுக்க செய்யுமானால் அதுவே இஸ்லாமிய சமுதாயத்தின் வெற்றியாகும்.   மாறாக,  இம்மாதிரி பிரகடனம் பொது அரங்கில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக இருக்குமானால் இதனால் தற்காலிக பலன் மட்டுமே கிட்டும்.

மேலும்,  இந்த பிரகடனம் இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை என்று குர்ஆனில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது.

“It is proved from clear guidelines provided in the Holy Quran that allegations of terrorism against a religion which preaches and guarantees world peace is nothing but a lie.

அப்படியானால்,   ஜிகாதிய அமைப்புகள் குர்ஆனை மேற்கோள் காட்டி தங்கள் வன்முறைகளை நியாயப்படுத்துவது ஏன்?   குர்ஆன் குறித்த விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் கொடுக்காமல் அம்மாதிரி விமர்சனங்களுக்கு அடக்குமுறை மிரட்டல்கள் விடுப்பது ஏன்?  உதாரணத்துக்கு, இணையத்தில் இஸ்லாத்தை கொள்கை அடிப்படையில் விமர்சிக்கும் நேசகுமார் முதலிய பதிவர்களுக்கு கொலை மிரட்டல் விடப்படுவது ஏன்?

4.   இந்த அமைப்பின் மிகப்பெரிய பொய் (தவறு!)

உஸ்மான் அவர்கள் பேசிய பேச்சு இதோ

Terrorism is the gravest crime as held by Quran and Islam. We are not prepared to tolerate terrorism in any form and we are ready to cooperate with all responsible people,”

“தீவிரவாதம் இஸ்லாத்தின் மிகப்பெரிய குற்றமாக குர்ஆனில் நிறுவப்பட்டிருக்கிறது – தமிழாக்கம்.

இதை எல்லா பத்திரிக்கைகளும் கொட்டை எழுத்தில் பிரசுரிக்கின்றன.  டைம்ஸ் 4 ஜூன் இதழில் எடிட்டோரியலுக்கு மேலே கட்டம் கட்டி இந்த வரிகளை பிரசுரித்திருக்கிறார்கள்!

ஆனால், இங்கு சொல்லப்பட்டது அப்பட்டமான உண்மைக்கு புறம்பான தவறு (அதாவது பொய்!)

இஸ்லாத்தில் மிகப்பெரிய பிழை ஷிர்க்.  அதாவது இறைவனுக்கு இணைவைப்பது.   இது மன்னிக்க முடியாத குற்றம்.    இது இஸ்லாத்தின் அடிப்படை பாடம் படித்தவர்களுக்கு கூட தெரியும்.

இஸ்லாத்தில் தீவிரவாதம் என்ற வார்த்தைகளே விளக்கப்படவில்லை. இஸ்லாத்தின் பார்வையில் செய்யும் நோக்கத்தை பொறுத்து கொலை, கொள்ளை மற்றும் வன்முறைகள் சரி அல்லது தவறு என்று கொல்லப்படுகின்றன.    இஸ்லாத்தின் வரலாற்றில் பல இடங்களில் கப்ஜா (அதாவது தாக்குதல்),  கொலை, கொள்ளைகள்,  அடிமைப்படுத்துதல் என்பதை நாம் சாதாரணமாக காண்கிறோம்.   அதனால், தீவிரவாதம் இஸ்லாத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது.   ஆனால், அதற்கு இஸ்லாம் கூறும் நியாயங்கள் வேறு.

அதனால்,  இந்த இயக்கம் இப்படி கூறி இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?   ஒன்று –  இவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை தெரியவில்லை.    இது இருக்க முடியாது.   இரண்டாவது –  இந்த இயக்கம் உண்மையல்லாத ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.  இது இருக்கலாம்.

“Deoband first: A fatwa against terror,” from The Economic Times, June 1:

NEW DELHI: For the first time ever, Islamic seminary Darul-Uloom Deoband issued a fatwa against terrorism on Saturday, stating Islam had come to wipe out all kinds of terrorism and to spread the message of global peace. The Darul-Uloom had denounced terrorism for the first time in February, but had not issued a fatwa so far.

Saturday’s fatwa, signed by Darul-Uloom’s grand mufti Habibur Rehman, asserts that “Islam rejects all kinds of unjust violence, breach of peace, bloodshed, murder and plunder and does not allow it in any form”.

Citing the “sinister campaign” to malign “Islamic faith…by linking terrorism with Islam and distorting the meanings of Quranic Verses and Prophet traditions”, Mahmood Asad Madani, leader of Jamiat Ulema-e-Hind, had wanted Deoband to spell out the stand of Islam on world peace.

The fatwa, issued before a huge gathering of Muslims in Delhi’s Ramlila Ground for the Anti-Terrorism and Global Peace Conference, went on to say, “It is proved from clear guidelines provided in the Holy Quran that allegations of terrorism against a religion which preaches and guarantees world peace is nothing but a lie. The religion of Islam has come to wipe out all kinds of terrorism and to spread the message of global peace. Allah knows the best.”

The conference was addressed by Jamiat chief and Darul-Uloom’s deputy rector Hazrat Maulana Qari Sayed Mohammed Usman.

He called the conference historic as Muslims of different sects and ideologies — including Nadwatul Ulama Lucknow, Jamaat-e-Islami Hind and All India Muslim Personal Law Board — ratified the fatwa against terrorism.

The exclusively-male turnout that read an “oath of allegiance” to the fatwa cheered most lustily as speakers attacked the US.

Jamiat Ulema-e-Hind leader Madani, an MP, stated that the fatwa should be welcomed by the entire Islamic world.

“Killing of innocent people is not compatible with Islam. The biggest challenge faced by us today is terrorism (which) threatens to strike at the very root of the secular structure of our society besides causing irreparable loss,” stated Madani.

Notwithstanding the caveats like “unjust” and “innocent”, which may make it appear falling short of an unequivocal condemnation of terrorism, the fatwa is viewed by many as a significant step forward towards rallying the public opinion against terrorism.

Coming after the February 25 denunciation, it is seen as reflective of the growing recognition on the part of clerics to counter misgivings about interpretations of scriptures.

Deoband has lately been under intense focus because many of the terrorist groups — from Taliban to Jaish and Harkat — are widely perceived to be Deobandi in orientation.

However, it was when the deputy rector of Deoband, Usman, came down heavily on “the dual policy of America” that the massive crowds cheered the most. “Whenever Christian and American interests are hurt in any part of the world, they take prompt action to set things right even at the cost of human lives. They maintain silence though when Muslims are the victims,” he said, further criticizing the US for its support to Israel.

According to Usman, Jamiat recently held a series of conferences and meetings with madrassas in Lucknow, Ahmedabad, Hyderabad, Kanpur, Surat, Varanasi and Kolkata to carry forward the anti-terror movement which was initiated at Deoband in February. Usman said that many people, especially in the West, were carrying out a propaganda that terrorism was synonymous with jehad.

He said that while terrorism is destructive, jehad is constructive. “Terrorism is the gravest crime as held by Quran and Islam. We are not prepared to tolerate terrorism in any form and we are ready to cooperate with all responsible people,” he said.

மே 27, 2008

சென்னை உட்லண்ட் ஹோட்டல் விவாகாரத்தின் பிண்ணனி

Filed under: Uncategorized — விருது @ 6:33 முப
//////  நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவனாக அறியப்பட்டவன். 38 ஏக்கர் நிலம், கடந்த 180 ஆண்டுகளாக வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் வசம் இருந்தது.

நகரில் தூய்மையான காற்று வீசவும், பசுமையான சுற்றுச்சூழல் நிலவவும், வேளாண் தோட்டக்கலைச் சங்கம் சார்பில் இந்த நிலத்தில் நூற்றுக்கணக்கான அரிய மரங்களும், மூலிகை தாவரங்களும் பூக்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் என் மீதான வெறுப்பில் இந்த நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு முயன்று வருகிறது. இந்த இடத்தில் வேளாண் தோட்டக்கலைப் பூங்கா அமைக்கப் போவதாக அரசு கூறுகிறது.

இந்தப் போர்வையில் நிலத்தை கையகப்படுத்தி என்னைத் துன்புறுத்த முயற்சிக்கிறது. ///

 
http://thatstamil.oneindia.in/news/2008/05/27/india-sc-puts-break-in-woodlands-drive-in-hotel.html
 
கரு-நா-நிதி ஆதாயம் இல்லாமல் ஆட்டையைப் போட மாட்டார் என்பதற்கு இன்னொரு உதாரணம்!!
 

பீடுநடை போடும் தமிழ்இந்து.காம் இணையதளம்

Filed under: Uncategorized — விருது @ 6:11 முப

சமீபத்தில்  தமிழ்இந்து.காம் என்ற ஒரு இணையதளத்தின் அறிமுகம் கிடைத்தது.

பொதுவாக இந்து இணைய தளங்கள் என்றால் அவை ஒன்று பஜனைமடங்களாகவோ இல்லை வெறும் அரசியல் சார்பாகவோ இருக்கின்றன.    இவை இரண்டு வகைகளும் தவறு என்று நான் சொல்லவில்லை.  நானே வைதிகஸ்ரீ பஜனை தளம்தானே நடத்துகிறேன்.

ஆனால்,  இவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு பெரிய வெற்றிடம் இருக்கிறது.

இன்றைய இந்து சமுதாயத்திற்கு இந்து உணர்வு என்பது ஒன்று ஆன்மீகம் சார்ந்தோ இல்லை அரசியல் சார்ந்தோ இருக்கிறது.    இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு ஒரு கலாசார, தேசீய இழையோடும் ஒரு உணர்வை முதன்மைப்படுத்தும் சிறந்த தளங்கள் பொதுவாக இல்லை என்றே சொல்லலாம்.   அதுவும் தமிழில்.

இன்றைய நவீன கலாசார மற்றும் நவீன சமுதாய சூழலில் வளர்ந்துவரும் இளைய இந்து சமுதாயத்திற்கும் மற்றும் மாறிவரும் முதிர் இந்து சமுதாயத்திற்கும் தங்கள் வாழ்வியலை ஒட்டிய கலாசார உணர்வுகளை பேசவும், பகிர்ந்துகொள்ளவும் இந்த தளம் ஒரு சரியான வழிகாட்டியாக தெரிகிறது.

அதுவும்,  ஒவ்வாத மற்றும் காழ்ப்பு தீராவிட கொள்கைகளால் பலவீனப்பட்டும்,  தாக்குதலுக்கு உள்ளாகியும் உள்ள தேசீய கலாசார இந்து உணர்வுகள் தமிழர்களிடையே மீண்டும் தழைக்கச்செய்ய இந்த தளம் முயலுமானால் அது ஒரு சிறந்த எழுச்சியாக இருக்கும்.   அதுவே இன்றைய தேவை!

தமிழனையும், இந்துவையும் இல்லாத இருவேறு இனங்களாக காட்ட முயலும் சில தேசவிரோத சக்திகளை முறியடித்து தமிழனின் தாய் மதத்தை பிரதிபலிக்கும் உண்மையான பண்டைய கலாசாரத்தில் பெருமைகளை  இன்றைய தமிழர்களை உணரச்செய்து அந்த கலாசாரத்தில் நம்மை பெருமைப் பட செய்ய இந்த தளம் முயலவேண்டும் என்பது என் ஆசை.

இந்த தளத்தை நடத்தும், பயன்படுத்தும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.  நன்றிகள்.

இந்த தளத்தை விடாமல் கவனித்து வரும் நான் அதில் மயங்கி அந்த தளத்துக்கு ஒரு இணைப்பை என் பதிவில் கொடுத்துவிட்டேன்.

 

வாழ்த்துக்கள்.

நன்றி

ஜயராமன்

அடுத்த பக்கம் »

Create a free website or blog at WordPress.com.