இந்த பாரதப்பூமியை பீடித்துள்ள ஒரே வியாதியான பாஜபாவை வீழ்த்தி இந்த புண்ணிய பூமியில் அழிந்துகொண்டிருக்கும் செக்குலர் உணர்வை காத்து இங்கிருக்கும் நூத்திப்பத்து கோடி இந்தியர்களையும் (முப்பத்து முக்கோடி தேவர்களை அழித்துவிடவேண்டும்…) காப்பாத்த சீன காருண்யத்தின் வரப்பிரசாதமாய் நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் கட்சியான சிபிஎம் செக்குலர் திலகங்களை தேடித்தேடி வெளிக்கொணர்வது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது.
இந்த சிகப்புச்சிட்டை சின்ன ராசுகள் கேரளாவில் இப்போது PDF லீடர் மதானியோடு கை கோர்த்து கட்டிப்பிரண்டுகொண்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மாண்புமிகு அப்துல் நாசர் மதானி ஒரு செக்குலர் திலகமாம். PDF கட்சி செக்குலர் கட்சியாம்.
எந்த மதானி என்கிறீர்களா? கிழிஞ்சது போங்க - நம்ப கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு புகழ் மதானி தாங்க…
மதானி செக்குலர் திலகம் என்றால் நான்தான் பராக் ஒபாமா.
இந்த தடவை சிகப்புச்சட்டைகளின் சாயம் வெளுத்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. திடீரென்று பெய்த மழையில் எதிர்பாராமல் முளைத்த காளான்களாய் இவர்கள் 60 சீட் போனதடவை வாங்கி தேசத்தை சோனியாவின் கையில் கொடுத்து சீரழித்தது இனிமேலும் நடப்பது மிகவும் சந்தேகம்தான். அதனால், இவர்கள் இப்போது யாரைப்பார்த்தாலும் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக்கொள்ளும் கிறுக்கர்களாய் அலைகிறார்கள்.
இவர்கள் மதானிக்கு கொடுத்த இந்த சர்டிபிகேட்டை அந்த கட்சியின் அறிவிக்கப்படாத அதிகாரபூர்வ ஏடான இந்துப்பத்திரிக்கை முழுதும் கட் செய்யாமல் வெளியிட்டு சந்தோஷப்படுகிறது.
http://www.hindu.com/2009/03/22/stories/2009032250430100.htm
Mr. Vijayan said the LDF had opposed Mr. Maudany strongly in the past. However, Mr. Maudany made it clear that he was in favour of secularism following his release from jail. He came out in the open against religious extremism and communalism and rightly approached political parties that followed similar principles.
இவர்களின் செக்குலர் ஒப்பாரியை இனிமேல் எங்கள் தெரு நாய்கூட மதிக்காது. எப்போதுதான் மதித்திருக்கிறது என்கிறீர்களா, அதுவும் சரிதான்!!!
அடுத்து சிபி எம் சொல்லப்போவது என்ன? அப்சல் குரு ஒரு காந்தியவாதி. அப்துல் கசாப் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்…
இப்படியெல்லாம் ஓட்டு வாங்குவதற்கு.. இவர்களுக்கு . தூ…


ஐயா, நான் மலேசியாவில் பயின்று கொண்டிருக்கும் ஒரு தமிழின மாணவன். கடந்த சில மாதங்களாக எனக்கொரு ஐயம் எழுந்துள்ளது. அதாவது, பண்டை கால தமிழர்களின் மதம் என்ன? பண்டை கால தமிழர்கள் ஹிந்து மதத்தினை சார்ந்தவர்களா? அல்லது இடையில்தான் ஹிந்து மதத்திற்கு மாற்றம் கண்டவர்களா? இவ்வினா சிறுபிள்ளை தனமாக இருக்கலாம், இருப்பினும் என் ஐயத்தை தீர்த்து வைப்பீர்கள் என நம்புகிறேன்.
Comment by Raju — மே 3, 2009 @ 11:55 மு.பகல் |