சென்னை ஏர்போர்ட்டில் ஒருவர் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார். அவர் லக்கேஜ் வந்து சேரவில்லையாம். அருகிலிருந்த ஒரு அறைக்கதவில் பெரிதாய் “மெய்புலன் ஆர்வலர்” என்று எழுதியிருந்தது. சரி, யாரோ ஒரு ஆபீசர் என்று நினைத்து உள்ளே வேகமாக நுழைந்து பார்த்தார். அது ஒரு கக்கூஸ். ‘சே’ என்று திரும்பினார்!
அவர் அந்த அறையில் சேவித்தது நவீனயுகத்தின் நாகரீகத்தமிழ். தமிழுக்கு இருக்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள் போதாதென்று இது இன்னொன்று புதிதாய் முளைத்திருக்கிறது. ‘Political correctness’ – (இதற்கு எனக்குத் தமிழ் தெரியவில்லை. ‘அரசியல்
………
……
இப்படித் தொடங்குகிறது நான் “தமிழ்இந்து” தளத்திற்காக சமரப்பித்த கட்டுரை.
அந்த கட்டுரையை உடனே இங்கும் பதிப்பிப்பது சரியல்ல என்பதால் நீங்கள் இங்குள்ள சுட்டியில் அந்த கட்டுரையை படித்து உங்கள் மேலான கருத்துக்களை வழங்குங்கள்.
http://www.tamilhindu.com/2008/09/the-state-of-tamil-language/


உண்மை தான். தாங்கள் கூறுவது மிகவும் நிதர்சனமான உண்மை. ஆங்கிலம் போன்ற உலக மொழி கூட தனது டிக்ஷனரியில் பல ஹிந்தி சொற்களை அப்படியே எடுத்துக்கொண்டுள்ளது. (எ. கா. ரொட்டி) ஒரு மொழி எந்த அளவு பிற மொழிகளை தனக்குள் ஏற்றுக்கொள்கிறதோ, அந்த அளவு வளர்ச்சி அடையும். உதாரணத்துக்கு ஹிந்தியையே எடுத்துக்கொள்வோம். ஹிந்தியில் ஒரிய, குஜராத்தி, சமஸ்கிருத, மராட்டி மற்றும் பல மொழிகளின் சொற்கள் கலந்துள்ளன. தெலுங்கில் கூட அரைவாசி சொற்கள் சமஸ்கிருத சொற்களே. அதனால் தான் ஹிந்தியும் தெலுங்கும் இந்தியாவிலேயே அதிகம் பேசப்படும் மொழிகளாக விளங்குகின்றன. The more any language accepts the foreign words, More would be its life. Otherwise it would become obsolete….
அக்காலத்தில் நீலாம்பிகை அம்மையாரும் தமிழ் தாத்தா உ. வே சா. வும் தனித்தமிழ் இயக்கம் நடத்தினர். ஆனால் வெற்றி பெற இயலவில்லை. தனித்தமிழால் ஆட்சி நடத்த முடியாது. மாற்றமே மனித தத்துவம். மாறாமல் இருப்பதற்கு மொழி கல்லோ மண்ணோ அல்ல. மொழி என்னைப்பொறுத்த வரையில் ஒரு உயிருள்ள பொருள். காலத்திற்க்கேற்ப மாறுவதே முறை.
Comment by ரகு ஐயர் — செப்டம்பர் 22, 2008 @ 6:20 மு.பகல் |
ரகு ஐயா,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//// அக்காலத்தில் நீலாம்பிகை அம்மையாரும் தமிழ் தாத்தா உ. வே சா. வும் தனித்தமிழ் இயக்கம் நடத்தினர். ஆனால் வெற்றி பெற இயலவில்லை. தனித்தமிழால் ஆட்சி நடத்த முடியாது. ///
தமிழில் இயல்பாக வேற்று மொழி வார்த்தைகள் (வார்த்தை என்பதே வடமொழிதான்) கலப்பது அதன் நவீன உபயோகத்தின் பரிணாமங்களைக் காட்டுகிறது. அதற்கிணையாக தமிழ் மொழிகள் இருக்குமேயானால் அதை உபயோகப்படுத்துவது தவறில்லை. ஒன்றை ஒத்து மற்றொன்று தாழ்வில்லை. தமிழ்ச் சொற்களை மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும் என்பது மொழியை முடக்குகிறது. அந்த பிடிவாதம் தமிழை தேக்கமடையச்செய்துவிடும்.
தங்களின் கருத்து என்னுடைய கருத்தோடு ஒத்துப்போவது அறிந்து மகிழ்ச்சி.
நன்றி
ஜயராமன்
Comment by ஜயராமன் — செப்டம்பர் 22, 2008 @ 6:26 மு.பகல் |