விருது

ஜூலை 21, 2007

பிரதிபா பாட்டில் – வெற்றி காட்டுவது என்ன?

கோப்பு வகை: அரசியல், ஜனாதிபதி — ஜயராமன் @ 6:08 பிற்பகல்

ஜனாதிபதி என்ற பதவிக்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும். அந்த அம்மையாரின் மீதான குற்றச்சாட்டுகளும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான உண்மையான காரணங்களையும் நாம் நன்கு விமர்சித்து இருந்திருந்தாலும், இந்த வெற்றிக்கு வாழ்த்துகள்.

பிரதிபா பாடில் அவர்கள் வெற்றிபெற கூடாது என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன். அவரின் வெற்றி இந்த பதவிக்கு உகந்தது அல்ல என்று தீர்க்கமாக நம்பியவன்.

அவரின் இந்த வெற்றியில் நம் எண்ணங்கள் என்ன?

இனி நம் கவலை எல்லாம், இந்த பதவியில் இந்த அம்மையார் எப்படி
நடந்துகொள்கிறார்கள் என்று பார்ப்பதிலேயே இருக்க வேண்டும். பழையதை நீடித்து மேலும் தரக்குறைவாக அவரை எதிர்க்க முடியாது. அதை கைவிட வேண்டும்.

எனக்கென்னவோ, பிஜேபி சந்தர்ப்பம் வாய்ந்தால்பிரதிபாபாட்டீல் அவர்களைகொண்டாடும் என்றுதான்தோன்றுகிறது. கலாம் ஜனாதிபதி ஆவதற்கு முதலில் எதிர்ப்பு காட்டிய காங்கிரஸ் பின்னால் கலாமை எப்படி பிஜேபி விரோத செயல்களில் உபயோகித்துக்கொண்டது என்று யோசித்தால் நான் சொல்வது புரியும்.

பிஜேபி சோனியாவுக்கு காட்டிய எதிர்ப்பையே கை கழுவி விட்டார்கள் என்பதை
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்… அப்படி இருக்கும்போது, இந்த அம்மையாரின் ஊழல்களை மறந்துவிட்டு கொண்டாட எத்தனை நாள் பிடிக்கும், இவர்களுக்கு? நாளையே பிஜேபி வென்று அம்மையார் இவர்களை பதவிபிரமாணத்துக்கு அழைத்தால் ரொம்பவுமே பிரதிபாவை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவார்கள்.
நம் இரண்டாவது கவலை. இந்த கோர்ட் கேஸ்கள் மேலும் தொடருமா என்பது.
ராஷ்ட்ரபதி என்பதால் இந்த கேஸ்கள் முடக்கப்படும். இதனால், இந்த கேஸ்களின் உண்மை நிலை – அது இது ஜோடிக்கப்பட்ட கேஸ் ஆக இருந்தாலும் சரி, அல்லது – பிரதிபா குற்றவாளியாக இருந்தாலும் சரி – உண்மை நிலை வெளியே வரவேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன். அது முடியாமல் போனது.
சோனியா என்னமோ பெரிய திட்டம் போட்டு இந்த அம்மையாரை கொண்டுவந்திருக்கிறார் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், இதை நான் நம்ப மாட்டேன். வழக்கம்போல, இசகு பிசகாக சோனியா மாட்டிக்கொண்டபோது எடுத்த ஒரு குருட்டாம் போக்கான முடிவுதான் இது.

சிவ்ராஜ் பாடில் மாதிரி கூஜாக்களை ரொம்பதான் சோனியா ப்ரமோட் செய்து இந்த பதவிக்கு கொண்டுவரப் பார்த்தாள். ஆனால், நடக்கவில்லை. அதனால், வழக்கமான – சோனியா பல்டி அடித்து ஒரு பெண்மணி என்று ஒரு அஸ்திரத்தை போட்டுவிட்டாள். அதனால், சோனியா பிரதமராக இது ஒரு முஸ்தீபு என்று சொல்வதையோ அல்லது ஒரு ரப்பர்ஸ்டாம்ப் வேண்டும் என்று இந்த அம்மையாரை தேர்வு செய்தார்கள் என்று சொல்வதையோ நான்ஒத்துக்கொள்ளவில்லை.
ஒரு பைசாக்கு பிரயோஜனமில்லாத ஒரு பதவியில் இந்த அம்மையார் ஒன்றையும் பெரிதாக செய்துவிட போவதில்லை. எனக்கென்னமோ, இந்த அம்மையார் பேச கூட பயப்படுகிறார்கள் – அல்லது தெரியவில்லை என்று தோன்றுகிறது. என்னமோ, காரணமில்லாமல் நம் பொம்மை முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் ஞாபகம்வருகிறது. போகப்போக பார்க்கலாம்.
பிஜேபி தன் இயல்பை மீறி அல்லது மறைத்து அரசியல் பண்ணப்பார்க்கிறது. தன்
இயல்பான தொகுதியை taken for granted பண்ணிக்கொண்டு, சிறுபான்மையினருக்கு வால் பிடிக்கிறது. இதை நாம் மைனாரிடி நிறுவனங்கள் மசோதாவிலிருந்து பல தடவை பார்த்தோம். இதனால், எதிர்மறையான விளைவே ஏற்படும். அரசனை நம்பி, புருஷனை கைவிட்ட கதையாகிவிடும். ஷேகாவத் முதலான தேசீய தலைவர்களை தன்னுடையவர் என்று சொல்ல வெட்கப்படும் இந்த கட்சி ஒரு கேலிக்கூத்து.

பிரதிபா ஒரு ஊழல்காரி.     உண்மைதான்.     அதனால்,  அவர் நாசகர வேலையில் ஈடுபடுவார் என்று சிலர் சொல்கிறார்கள்.

நான் எல்லா -   சரி,  ஒரு முக்காலே மூணு வீசை -  அரசியல்வாதிகளுமே ஊழல்பேர்வழிகள் என்று சொல்கிறேன்.     இப்பொழுதெல்லாம்,   முழு அரசியல்வாதிகளை கவர்னர் ஆக்குவது தான் சர்வ சாதாரணம்.     பெங்களூரில் தோற்றவுடன் நம் கிருஷ்ணாவை தூக்கி அடிக்க பம்பாயில் கவர்னர் உத்யோகம் கொடுக்கிறார்கள்.    இன்னும் கொஞ்ச நாள் போனால்,   தேர்தலில் நிற்கும் போட்டி வாக்காளர்களுக்கு டெபாஸிட் போனால்,  அவர்களை சமாதானப்படுத்த கவர்னர் வேலை கொடுப்பார்கள்.    கொஞ்ச நாளில்,  கவர்னர் வேலையும்  கூட்டணி கட்சிகளின் கொள்ளையில் பங்கு போடப்பட்டு,   ராமதாசுக்கு ரெண்டு,   கருணாநிதிக்கு ஐந்து,  லல்லுவுக்கு மூன்று என்று ஆகிவிடும்.    ராஷ்ட்ரபதி பதவிக்கும்  தன் வைப்பாட்டி பெண்ணையோ,   மருமகன் பையனையோ குந்த வைப்பார்கள்,  பகிரங்கமாக.    கூட்டணியில் ஐந்து வருஷம் ராஷ்ட்ரபதி பதவி என்பது போய் மாயாவதி-கல்யாண்சிங் போல காடாறு மாதம்-நாடாறு மாதம் என்று பிரித்துக்கொள்வார்கள்.    ராபரி மாதிரி தன் பெண்டாட்டியோ,  அல்லது எம்ஜிஆர் மாதிரி தன் கொள்கை பரப்பையோ ராஷ்ட்ரபதியாக்கி ரிமோட் வேலை செய்வார்கள்.

பயமாக இருக்கிறதா,   ஆனால், நடக்கப்போகிறது.

இப்போதே ராஷ்ட்ரபதி பதவிக்கு இட ஒதுக்கீடு எழுதப்படாமல் இருக்கிறது.    ஒரு  துலுக்கன் என்ற ஒரே தகுதியை தேடி இன்று உப ஜனாதிபதி எல்லா கட்சிகளாலேயும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அதனால்தான் சொல்கிறேன்,  பிரதிபா ஒரு சாதாரண அரசியல்வாதி.   அதுகூட சரியாக ஜயிக்க தெரியாத ஒரு அரைகுறை அரசியல்வாதி.    மாட்டிக்கொண்டு பல கேஸ்களில் முழிக்கும் ஒரு அரசியல்வாதி.     அவர் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் பண்ண நம் திராவிட கட்சிகளிடம் பாடம் படிக்கவில்லை என்பதால் அவர் மட்டமாக ஆகிவிட மாட்டார்.   மற்ற ஏதாவது ஒரு அரசியல்வாதி வந்திருந்தால் தேசத்துக்கு என்ன லாபமோ, நஷ்டமோ அதுதான் இப்போதும் நடக்கப்போகிறது.

பிரதிபா போட்டுக்கொண்ட முக்காடு இன்று தேசத்தின் தலையில்!

2 மறுமொழிகள் »

  1. YOU ARE CORRECT. NOTHING WILL HAPPEN NEWLY. MORE OVER THESE PEOPLE ARE WHY TRY TO MAKE RELIGIOUS COLOUR TO THIS POST, ITS ALSO A BAD WEATHER FOR OUR NATION

    மறுமொழி by rama selvi — ஜூலை 25, 2007 @ 8:58 மு.பகல் | பதில்

  2. Madam,

    Thanks for your comments.

    I agree with your comments. Pratibha Patil’s election shows the loss of respect for president’s post.

    Also, Please tell me your opinion on my post on Abdul Kalam.

    மறுமொழி by ஜயராமன் — ஜூலை 25, 2007 @ 9:00 மு.பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.